Saturday 17 November 2018

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

படம்: மன்மத லீலை
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
ஆண்டு: 1976

மனைவி அமைவதெல்லாம் 
இறைவன் கொடுத்த வரம்
மனைவி அமைவதெல்லாம் 
இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன? 
உனக்கும் வாழ்வு வரும்
மனது மயங்கி என்ன? 
உனக்கும் வாழ்வு வரும்

மனைவி அமைவதெல்லாம் 
இறைவன் கொடுத்த வரம்

இரவில் நிலவொன்று உண்டு 
உறவினில் சுகமொன்று உண்டு
இரவில் நிலவொன்று உண்டு 
உறவினில் சுகமொன்று உண்டு
மனைவியின் கனவொன்று உண்டு 
எனக்கது புரிந்தது இன்று

மனைவி அமைவதெல்லாம் 
இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன? 
உனக்கும் வாழ்வு வரும்

பொருத்தம் உடலிலும் வேண்டும் 
புரிந்தவன் துணையாக வேண்டும்
பொருத்தம் உடலிலும் வேண்டும் 
புரிந்தவன் துணையாக வேண்டும்
கணவனின் துணையோடு தானே 
காமனை வென்றாக வேண்டும்

மனைவி அமைவதெல்லாம் 
இறைவன் கொடுத்த வரம்

கவிஞன் கண்டாலே கவிதை 
காண்பவன் கண்டாலே காதல்
கவிஞன் கண்டாலே கவிதை 
காண்பவன் கண்டாலே காதல்
அழகினைப் புரியாத பாபம் 
அருகினில் இருந்தென்ன லாபம்?

மனைவி அமைவதெல்லாம் 
இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன? 
உனக்கும் வாழ்வு வரும்
மனைவி அமைவதெல்லாம் 
இறைவன் கொடுத்த வரம்

சட்டி சுட்டதடா கை விட்டதடா

படம் - ஆலயமணி
இசை - விஸ்வநாதன் இராமமூர்த்தி
குரல் - சௌந்தரராஜன்
வரிகள் - கண்ணதாசன்


சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா

பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதை மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா
அமைதி தெய்வம் முழுமனதில் கோவில் கொண்டதடா

ஆரவார பேய்கள் எல்லாம் ஓடி விட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடி விட்டதடா
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
மனம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கொண்டதடா

எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா
நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா

மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா

மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எது வென்றாலும்  வாடி நின்றால் ஓடுவதில்லை வாடி நின்றால் ஓடுவதில்லை எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும் (மயக்கமா) ஏழை மனதை மாளிகையக்கி இரவும் பகலும் காவியம் பாடி நாளைப் பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு தெய்வத்தின் கட்டனை ஆறு... ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி... வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும் இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும் எல்லா நன்மையும் உண்டாகும் ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு தெய்வத்தின் கட்டனை ஆறு... உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்.... நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும் உண்மை என்பது அன்பாகும் - பெரும் பணிவு என்பது பண்பாகும் - இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும் எல்லா நன்மையும் உண்டாகும் ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு தெய்வத்தின் கட்டனை ஆறு... ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்.. அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்.. இதில் மிருகம் என்பது கள்ள மனம் உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம் இந்த ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம் ஆண்டவன் வாழும் வெள்ளை மனம் ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு தெய்வத்தின் கட்டனை ஆறு....

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி

நல்லவர்க்கெல்லாம்... நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா பறவைகளே பதில் சொல்லுங்கள் மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள் மனதிற்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள் நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை மனிதனம்மா மயங்குகிறேன் தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே நல்லவர்க்கெல்லாம்... நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா

அமைதியான நதியினிலே ஓடும் - ஓடம்

அமைதியான நதியினிலே ஓடும் - ஓடம்  அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் அமைதியான நதியினிலே ஓடும் - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும் காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும் கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய் அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் தென்னம் இளங்கீற்றினிலே...ஏ..ஏ..ஏ தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமனம் வீழ்வதில்லை காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமனம் வீழ்வதில்லை அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம் ஓ ஓ ஓ......  அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்துவிடும் அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்துவிடும் அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும் அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும் அமைதியான நதியினிலே ஓடும் - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும் கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய் அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்.

பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம்போக

பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம்போக  நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக  பல்லாக்கு வாங்க வந்தேன் ஊர்வலம்போக  நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக  மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் பெண்ணுக்கு சூட  மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் பெண்ணுக்கு சூட  அதை மண் மீது போட்டுவிட்டேன்  வெய்யிலில் வாட ..வெய்யிலில் வாட  பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம்போக  நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக  மன மேடை போட சொன்னேன் மங்களம் இல்லை  மணமகளை காண வந்தேன் குங்குமம் இல்லை  மன மேடை போட சொன்னேன் மங்களம் இல்லை  மணமகளை காண வந்தேன் குங்குமம் இல்லை  காதலுக்கே வாழ்ந்திருந்தேன் கற்பனை இல்லை  கல்யாணம் கொள்வதுமட்டும் என் வசமில்லை..என் வசமில்லை .............பல்லாக்கு.............  கண்ணாலே பெண்ணை அன்று கண்டது பாவம்  கண்டவுடன் காதல் நெஞ்சில் கொண்டது பாவம்  கண்ணாலே பெண்ணை அன்று கண்டது பாவம்  கண்டவுடன் காதல் நெஞ்சில் கொண்டது பாவம்  கொண்ட பின்னே பிரிவை சொல்லி வந்தது பாவம்  வெறும் கூடாக பூமியில் இன்னும்  வாழ்வது பாவம்..வாழ்வது பாவம் ...........பல்லாக்கு..

போனால் போகட்டும் போடா போனால் போகட்டும் போடா

ஓஹொஹோ ஓஹோ ஹோ ஹொஹொஹோஓஓஓ போனால் போகட்டும் போடா போனால் போகட்டும் போடா - இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா? போனால் போகட்டும் போடா - இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா? போனால் போகட்டும் போடா.  ஓஹொஹோ ஓஹோஹோ ஹோஓஓஓ ஓஹோஹோஓஓஓ ஓஓஓஓஓஓஓ ஓஓஓ ஓஓஓஓஓஓஓ  வந்தது தெரியும் போவது எங்கே? வாசல் நமக்கே தெரியாது வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது? வாழ்க்கை என்பது வியாபாரம் - வரும் ஜனனம் என்பது வரவாகும் - அதில் மரணம் என்பது செலவாகும். போனால் போகட்டும் போடா ஆஆஆ போனால் போகட்டும் போடா போனால் போகட்டும் போடா போனால் போகட்டும் போடா.   இரவல் தந்தவன் கேட்கின்றான் - அதை இல்லையென்றால் அவன் விடுவானா? உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா? கூக்குரலாலே கிடைக்காது - இது கோட்டைக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது. போனால் போகட்டும் போடா ஆஆஆ  போனால் போகட்டும் போடா - இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா? போனால் போகட்டும் போடா. ஓஹொஹோ ஹோஹோஹோ ஹோஓஓஓ ஓஹோஹோஓஓஓ ஓஓஓஓஓஓஓ ஓஓஓ ஓஓஓஓஓஓஓ  எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன் இதற்கொரு மருந்தைக் கண்டேனா? இருந்தால் அவளைத் தன்னந்தனியே எரியும் நெருப்பில் விடுவேனா? நமக்கும் மேலே ஒருவனடா - அவன் நாலும் தெரிந்த தலைவனடா - தினம் நாடகமாடும் கலைஞனடா. போனால் போகட்டும் போடா ஆஆஆ   போனால் போகட்டும் போடா - இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா? போனால் போகட்டும் போடா போனால் போகட்டும் போடா போனால் போகட்டும் போடா. ஓஹொஹோ ஹோஹோஹோ ஹோஓஓஓஓஹோஓ

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது  கருடா சௌக்கியமா பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது  கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்  எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..  அதில் அர்த்தம் உள்ளது..  உயர்ந்த இடத்தில் இருக்கும் போது  உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் உயர்ந்த இடத்தில் இருக்கும் போது  உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது  கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்  எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..  அதில் அர்த்தம் உள்ளது..  வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும் அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும் உனை போலே அளவோடு உறவாட வேண்டும் உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது அது சிறுமை என்பது.. அதில் அர்த்தம் உள்ளது பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது  கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்  எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..  அதில் அர்த்தம் உள்ளது..  நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது இது கணவன் சொன்னது.. இதில் அர்த்தம் உள்ளது பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது  கருடா சௌக்கியமா பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது  கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்  எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..  அதில் அர்த்தம் உள்ளது..  படம் : சூரியகாந்தி

Sunday 18 March 2018

சொடக்கு மேல

Thaanaa Serndha Koottam
Music Anirudh Ravichander
Lyrics Mani Amudhavan, Vignesh Shivan
Singers Anthony Daasan

சொடக்கு மேல சொடக்கு போடுது
என் விரலு வந்து
நடு தெருவுல நின்னு சொடக்கு போடுது.
சொடக்கு மேல சொடக்கு போடுது
என் விரலு வந்து
நடு தெருவுல நின்னு சொடக்கு போடுது.
வாங்க வாங்க
என்னய்யா செய்வீங்க எப்பய்யா செய்வீங்க.
ஹே சொடக்கு மேல ஹே சொடக்கு மேல
சொடக்கு மேல சொடக்கு போடுது.
என் விரலு வந்து
நடு தெருவுல நின்னு சொடக்கு மேல சொடக்கு போடுது.
வாங்க வாங்க
என்னய்யா செய்வீங்க எப்பய்யா செய்வீங்க.
ஹே சொடக்கு மேல ஹே சொடக்கு மேல
சொடக்கு மேல சொடக்கு போடுது.
என் விரலு வந்து
நடு தெருவுல நின்னு சொடக்கு மேல சொடக்கு போடுது.